தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 11, 2020, 9:53 AM IST

ETV Bharat / state

மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் - ஆசிரியர்கள் இருவர் பணியிடை நீக்கம்

தர்மபுரி: பாலக்கோடு அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

sexual harassment
sexual harassment

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இருவர், மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் கொடுத்து வந்துள்ளனர்.அதுமட்டுமல்லாமல், தொலைபேசியில் சித்திரங்கள், குறுந்தகவல்கள், காதல் கவிதைகள் அனுப்பியதாக மாணவிகளின் உறவினர்கள் பள்ளி நிர்வாகத்தில் புகார் அளித்தனர்.

ஆனால், இதற்கு பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் ஆசிரியர்கள் லட்சுமணன், சின்ன முத்துவை பிடித்து காவல்துறையினரிடம்பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, ஆசிரியர்கள் இருவரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். பின்னர், தருமபுரி முதன்மை கல்வி அலுவலர் முத்து கிருஷ்ணன், பள்ளி மாணவிகள் மீது பாலியல் சீண்டல் செய்த ஆசிரியர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: குடிக்க பணம் தர மறுத்ததால் தந்தையைக் கொன்ற மகன்

ABOUT THE AUTHOR

...view details