பெங்களூரு (கர்நாடகா): பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா நேற்று(ஜன.20) திடீர் உடல்நலக் குறைவு காரணமாக பௌரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் சசிகலாவிற்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவமனை டீன் மனோஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”சசிகலா மூச்சுத்திணறல், காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பிரச்னைகளின் காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது.