தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 13, 2020, 8:06 AM IST

ETV Bharat / state

பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளர் தேர்வு!

தருமபுரி: காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வை பெண்கள் உள்பட ஆறாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர்.

Police SI examination
Police SI examination

தருமபுரி மாவட்ட காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தோ்வு நான்கு மையங்களில் நடைபெற்றது. இப்பணிக்கான எழுத்துத் தேர்வை ஆயிரத்து 13 பெண்கள் உள்பட ஆறாயிரத்து 282 பேர் நேற்றும் இன்றும் எழுதுகிறார்கள்.

இதில் நேற்று நடைபெற்ற தேர்வை விண்ணப்பித்திருந்த ஐந்தாயிரத்து 937 பேரில் நான்காயிரத்து 510 பேர் எழுதினார்கள். ஆயிரத்து 427 பேர் தோ்வில் கலந்துகொள்ளவில்லை.

தேர்வு நடைபெற்ற மையங்களை சேலம் சரக காவல் துறைத் தலைவர் (டிஐஜி) பிரதீப்குமார், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் உள்ளிட்டோர் மேற்பார்வையிட்டு ஆய்வுசெய்தனர். மேலும், தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்புப் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிங்க: திருப்பூர்: கொலை வழக்கில் போலி செய்தியாளர் கைது!

ABOUT THE AUTHOR

...view details