தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில், கடைகளுக்கு வெளியே நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருவதாக தர்மபுரி நகர காவல் நிலையத்தில் புகார்கள் குவிந்தன.
தர்மபுரியில் தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது - Dharmapuri Government Medical College
தர்மபுரியில் தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை சிசிடிவி உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர்.
![தர்மபுரியில் தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது Etv Bharat](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-16410518-thumbnail-3x2-bik.jpg)
Etv Bharat
தர்மபுரியில் தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது
இதுகுறித்து தர்மபுரி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். வாகனங்கள் திருடப்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நபரின் இருசக்கர வாகனத்தை ஒருவர் திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் தர்மபுரி மாவட்டம் அரியகுளம் பகுதி சேர்ந்த ஹரிஹரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ஏழு இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன.
இதையும் படிங்க: காதல் திருமணமான நான்கு நாட்களில் இளைஞர் மரணம்