தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தர்மபுரி அருகே ரயில்வே அதிகாரிகள் சிறைப் பிடிப்பு! - ரயில்வே அதிகாரிகள் சிறைப் பிடிப்பு

மாற்றுப் பாதையில் ரயில்வே பாதையை அமைக்க வலியுறுத்தி அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை சவுளுப்பட்டி கிராம மக்கள் சிறைப் பிடித்தனர்.

ரயில்வே அதிகாரிகள் சிறைப் பிடிப்பு
ரயில்வே அதிகாரிகள் சிறைப் பிடிப்பு

By

Published : Nov 16, 2022, 1:43 PM IST

தர்மபுரி: சவுளுப்பட்டி கிராமத்தில் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தர்மபுரி - மொரப்பூர் ரயில்வே பாதை பணிக்காக அதிகாரிகள் அளவீடு செய்துள்ளனர்.

அளவீடு செய்த அதிகாரிகளை கிராம மக்கள் சிறைப் பிடித்தனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

ரயில்வே அதிகாரிகள் சிறைப் பிடிப்பு

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ரயில்வே பாதை தங்களுக்கு வேண்டும். ஆனால் தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்காதவாறு இருக்க வேண்டும். தாங்கள் குடியிருக்கும் பகுதியில் வீடுகளை இடிக்காமல் காலியிடம் இருக்கும் பகுதியில் ரயில்வே பாதை அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: விதிமீறலில் ஈடுபட்ட பெண் ஏ.டி.ஜி.பியின் அரசு வாகனம் : ரூ.500 அபராதம்

ABOUT THE AUTHOR

...view details