தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாளையம்புத்தூர் சுங்க சாவடியில் சுங்க கட்டணம் 5 ரூபாய் உயர்வு! - பாளையம்புத்தூர் சுங்க சாவடி

தருமபுரி: பாளையம்புத்தூர் சுங்க சாவடியில் கனரக வாகனம், பேருந்து சுங்க கட்டணம் ஐந்து ரூபாய் உயா்ந்துள்ளது.

Palayampudhur Toll Gate at increased by 5 rupees
Palayampudhur Toll Gate at increased by 5 rupees

By

Published : Sep 1, 2020, 9:55 PM IST

தமிழ்நாட்டில் இன்று முதல் 21 சுங்க சாவடிகளில் வாகனங்களின் சுங்க கட்டணம் 5 முதல் 15 வரை உயா்ந்துள்ளது.

தருமபுரி மாவட்டம், பாளையம்புத்தூரில் உள்ள பாளையம் சுங்கச் சாவடியில் கனரக வாகனம்(டிரக்), பேருந்துகளுக்கு மட்டும் ஒரு முறை சென்றால் ரூ.340 ஆகவும் பலமுறை சென்று வர ரூ.505 ஆக இருந்த நிலையில் பலமுறை சென்று வருவதற்கு முன்பிருந்த கட்டணங்களில் இருந்து 5 ரூபாய் அதிகரித்து தற்போது 510 ரூபாயாக வசூல் செய்யப்பட்டு வருகிறது.

மற்ற அனைத்து வாகனங்களுக்கும் பழைய கட்டணங்களே வசூல் செய்யப்பட்டு வருவதாகச் சுங்கச் சாவடி அலுவலர்கள் தெரிவித்தனர்.

மேலும் கார், டெம்போ வாகனங்களுக்கு சுங்ககட்டணம் உயர்த்தப்படாததால் கார் ஓட்டுநர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details