தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்துக்குட்பட்ட ஏரியூர் ரெட்டியார் தெருவில் சின்ன பாப்பா (70) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர் நேற்று (ஜூன் 4) வழக்கமாக சமையல் செய்து கொண்டிருந்தார்.
குடிநீர் எடுக்க வெளியே சென்றபோது திடீரென குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இந்தத் தீ விபத்தில் மூதாட்டி வைத்திருந்த உணவுப்பொருள்கள், துணி உள்ளிட்ட 20 ஆயிரம் மதிப்புள்ள அத்தியாவசிய பொருள்கள் எரிந்து நாசமாயின.