தருமபுரி மாவட்டம் பாலக்கோடு புலிக்கரையில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமாக ஈஸ்வரன் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான சுமார் 10 ஏக்கர் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து துணிக்கடை கட்டிவருகின்றனர்.
இதற்கு திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறையைச் சேர்ந்த சில அலுவலர்களும் சுமார் மூன்று லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு ஆதரவு தெரிவித்துவருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர்.