தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 18, 2020, 10:37 PM IST

ETV Bharat / state

சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

தருமபுரி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி இஸ்லாமியர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள்
போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள்

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் தேசியக் கொடியை ஏந்தியும், பதாகைளை ஏந்தியும் பெண்கள், குழந்தைகள் என 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள்

மேலும், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க:'இஸ்லாமியர்கள் வாக்களிக்காமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்குமா?' - சி.ஏ.ஏ. குறித்து அமைச்சர்களிடம் பெண் முறையீடு

ABOUT THE AUTHOR

...view details