தருமபுரி:பென்னாகரம் அடுத்த நாகமரை பகுதியைச் சேர்ந்தவர் முனிராஜ். இவர், பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி (35) என்ற தனது முன்னாள் காதலியைக் கர்நாடகா மாநிலம் ஹனுர் தாலுக்க மலைக்கு அழைத்துச் சென்று கொலை செய்தார்.
இந்த சம்பவத்தை முனி ராஜ் தனது பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்துள்ளார். அதில், “என்னை கொலைகாரனாக ஆக்கிட்டியே லட்சுமி, போயிட்டியா, அந்த ஈஸ்வரன் என்ன கொலை செய்ய அனுப்பி வைத்துவிட்டான்; நீ இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து கொலை செய்ய வைச்சுட்டான்"
பாருங்க... இந்த கல்லைத் தூக்கிப் போட்டுத் தான் கொலை செய்தேன். நான் தான் கொலை செய்தேன்” என ஆவேசமாகக் கத்தி பேஸ்புக்கில் நேரலை செய்துள்ளார். பின்னர், அவரும் அங்கேயே தற்கொலை செய்துக்கொண்டார்.