தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே 15 வயது மாணவி ஒருவர் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்தார். அதே ஊரைச் சேர்ந்தவர் முத்து (24). இவருக்குத் திருமணமாகி மனைவி, 2 வயதில் குழந்தை இருக்கின்றனர்.
இவர் கோயம்புத்தூரில் கூலி வேலை செய்துவருகிறார். இந்நிலையில் கோயம்புத்தூரிலிருந்து ஊருக்கு வந்த முத்து கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை அவரது வீட்டிற்குத் தெரியாமல் தான் வேலை செய்யும் இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.