தருமபுரி:பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் ஊட்டமலை பகுதியில் இன்று (ஜனவரி 31) காட்டு யானை ஒன்று தனியாக ஊர் பகுதியை நோக்கி வந்துள்ளது. ஒற்றை காட்டு யானை வருவதைக் கவனித்த பொதுமக்கள் உடனடியாக வனத் துறைக்குத் தகவல் அளித்தனர்.
வனத் துறையினர், ஊர் பொதுமக்கள் காட்டு யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர். பின்பு எங்கிருந்து வந்தது என்று பார்க்கும்பொழுது, தற்பொழுது ஒகேனக்கல் காவிரி ஆற்றுப் பகுதியில் நீர் வரத்து படிப்படியாக குறைந்து ஆற்றில் பாறைகள் மேலே தெரிய ஆரம்பித்துள்ளது.