தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 2, 2020, 12:59 PM IST

ETV Bharat / state

’எங்களுக்கு உணவு வழங்கவில்லை’ - தாமதமாகப் பணிகளைத் தொடங்கிய அலுவலர்கள்

தருமபுரி: வாக்கு எண்ணிக்கை மையத்தில் அரசு அலுவலர்களுக்கு காலை உணவு வழங்கப்படாததால் வாக்குப்பெட்டிகள் தாமதமாக திறக்கப்பட்டன.

Dharmapuri election
Local body election counting

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்றும் அரசு அலுவலர்களுக்கு காலை உணவு 10:30 மணி கடந்தும் வழங்கப்படாததால், அவர்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

நீண்ட வாக்குவாதத்துக்குப் பிறகு காலை 10:45 மணிக்கு உணவு வழங்கப்பட்டது. இதனை அரசு அலுவலர்கள் முண்டியடித்துக்கொண்டு வாங்கினர். இதுகுறித்து அரசு அலுவலர்கள் கூறுகையில், தாங்கள் காலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வந்ததாகவும் காலை 10:30 மணியாகியும் தங்களுக்கான உணவு வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

உணவுக்கு முண்டியடித்துக்கொண்ட அரசு அலுவலர்கள்

இதேபோல, அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில், வாக்கு எண்ணும் தேர்தல் அலுவலர்களுக்கு காலை உணவு வழங்கப்படாததால் 3 மணிநேரம் தாமதமாக வாக்குப்பெட்டிகள் திறக்கப்பட்டன.

இதையும் படிக்க: ரயில்வே கட்டண உயர்வு: பயணிகள் கருத்து

ABOUT THE AUTHOR

...view details