தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 65 ஆயிரம் கனஅடி வரை வந்துகொண்டு இருக்கிறது. இதையடுத்து ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இன்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பரிசல் இயக்க தடை விதித்திருந்தபோதும் பரிசலில் சென்றபோது அது கவிழ்ந்ததில் ஒருவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். மூவர் காப்பாற்றப்பட்டனர்.
ஒகேனக்கல்லில் செல்ஃபி எடுக்க வேண்டாம்: அமைச்சர் வேண்டுகோள் - ஒகேனக்கல்
தருமபுரி: ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக அருகே சென்று பார்க்கவோ, செல்ஃபி எடுக்கவோ வேண்டாம் என அமைச்சர் கே.பி. அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
![ஒகேனக்கல்லில் செல்ஃபி எடுக்க வேண்டாம்: அமைச்சர் வேண்டுகோள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4407824-thumbnail-3x2-kpa.jpg)
அன்பழகன்
அன்பழகன் செய்தியாளர் சந்திப்பு
இதுகுறித்து செய்தியாளர்களுடன் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், ”ஒகேனக்கல்லில் நீர்வரத்து காரணமாக சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தந்து தண்ணீரின் அருகே சென்று செல்ஃபி எடுப்பது, குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்” என்றார்.