தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை மண் பாண்டங்களுக்கு பெயர்பெற்ற பகுதியாகும். இப்பகுதியில் அகல்விளக்கு, கொலுபொம்மைகள், பொங்கப் பானைகள், விநாயகர் சிலைகள் போன்றவை கைகளால் செய்யப்பட்டு சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இங்கு பரம்பரை பரம்பரையாக மண்பாண்ட தொழில் செய்துவகின்றனர்.
நாளொன்றுக்கு தனிநபர் சுமார் 500 முதல் 1000 அகல் விளக்குகள் வரை தயாரிக்கின்றார். அதியமான்கோட்டையில் ஐந்து வகையான அகல்விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. சிறிய அகல் விளக்குகள் 1 ரூபாய்க்கும், பெரிய அகல் விளக்குகள் 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.