தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உழைப்பாளர் தினத்தில் உழைத்துவரும் சுமை தூக்கும் தொழிலாளர்கள்! - உழைப்பாளர் தினத்தில் உழைத்துவரும் சுமை தூக்கும் தொழிலாளர்கள்

தருமபுரி: உழைப்பாளர் தினமான இன்றும் தங்களது அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்காக சுமை தூக்கும் தொழிலாளர்கள் உழைக்கின்றனர்.

உழைப்பாளர் தினத்தில் உழைத்துவரும் சுமை தூக்கும் தொழிலாளர்கள்!
உழைப்பாளர் தினத்தில் உழைத்துவரும் சுமை தூக்கும் தொழிலாளர்கள்!

By

Published : May 2, 2020, 10:46 AM IST

தருமபுரி நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் அரிசி, நெல் ஆகியவையை ரயிலிலிருந்து இறக்கி லாரிகளில் ஏற்றும் பணியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றிவருகின்றனர். இங்கு பணியாற்றக்கூடிய சுமை தூக்கும் தொழிலாளர்களில் 50 சதவீதம் பேர் 45 வயதைக் கடந்தவர்கள்.

ஒவ்வொருவரும் 20 ஆண்டுகள் 25 ஆண்டுகள் சுமை தூக்கும் தொழிலாளியாகவே தங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். மாதத்திற்கு ஐந்து முதல் 6 நாள்கள் மட்டுமே இவர்களுக்கு வேலை கிடைக்கிறது. இவர்களின் மாத வருவாய் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை மட்டுமே. குறைந்த வருவாயைக் கொண்டு தங்களது குடும்பத்தின் அத்தியாவசிய தேவையான உணவு தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றனா்.

உழைப்பாளர் தினத்தில் உழைத்துவரும் சுமை தூக்கும் தொழிலாளர்கள்!

இந்நிலையில் மே ஒன்றாம் தேதியான நேற்று உலகம் முழுவதும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்படும் சூழலிலும் தங்களது அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்காகவும் வேலை வரும்போது வேலை செய்யவேண்டும் என்பதற்காக வேலை செய்கின்றனர். இது குறித்து சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் கூறுகையில், ’மே தினமான இன்று உழைக்காமல் என்றுதான் உழைப்போம்’ என பெருமிதமாக கூறினார்.

இதையும் படிங்க...மகளுக்காக மருத்துவச் சீட்டை முறைகேடாகப் பெற்ற கிரண்பேடி! - அடுக்கடுக்காக புகார் கூறும் அமைச்சர்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details