தென்னிந்தியாவின் நயாகரா என அழைக்கப்படும் ஒகேனக்கல் அருவியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர். நேற்று (பிப்.8) ஏராளமான சுற்றுலாப்பயணிகள் மெயின் அருவில் குளித்து மகிழ்ந்தனர்.
அதில் சிலர் எச்சரிக்கையையும் மீறி தடை செய்யப்பட்ட பகுதிகளில் குளித்தனர். இதனிடையே, ஆலம்பாடி பகுதியில் ஒரு இளைஞர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதைக் கண்டு அங்கிருந்த பெண் ஒருவர் அவரைக் காப்பாற்ற அபாயக் குரல் எழுப்பவே அங்கிருந்த நால்வர் வேகமாக தண்ணீருக்குள் பாய்ந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞரைக் காப்பாற்றினர்.