தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலை பகுதியில் காவிரி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்களின் வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. ஆலம்பாடி பகுதியில் காவிரி ஆற்றின் அருகே வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை பலகைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடிக்கு மேல் அதிகரிக்கும் என மத்திய ஜல் சக்தி துறை அறிவித்ததைத்தொடர்ந்து தர்மபுரி மாவட்ட நிர்வாகம் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.