தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மாரண்டஅள்ளி பகுதியைச் சேர்ந்த சிக்கோன் என்பவரின் மகன் விக்னேஷ் (27). இவரும், திருச்சி முசிறி பகுதியைச் சேர்ந்த காஞ்சனா (26) என்பவரும் ஃபேஸ்புக் மூலம் காதலித்துவந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறிய மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது.