நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவி மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இதனையடுத்து பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை வாங்குவதற்கு ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் காய்கறி சந்தைகளை மக்கள் வசதிக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துவருகிறது.
அதன்படி தற்காலிக காய்கறி சந்தை, வாகனங்கள் மூலம் வீட்டிற்கு அருகிலேயே காய்கறி விற்பனை உள்ளிட்ட பல வழிமுறைகளில் மக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை கொண்டுசேர்கின்றனர்.