தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள முதுக்கம் பட்டி பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து முதுக்கம்பட்டி ஏரிக்கல்னூர் சாலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
முதுக்கம்பட்டி கிராம மக்கள் குடிநீர் வழங்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கும் ஊராட்சி அமைப்புகளுக்கும் பல முறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இன்று காலை பெண்கள் காலி குடங்கள் மற்றும் தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.