தர்மபுரி : மிட்டாரெட்டிஅள்ளி அருகே வனப்பகுதியின் மையப்பகுதியில் 6 கிராமங்கள் உள்ளன. கிராமத்தில் குடிநீர், சாலை, மின்சார வசதி கோரி கிராம மக்கள் தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கிராமத்தை பார்வையிட்ட எம்.எல்.ஏ.
இதையடுத்து, வெங்கடேஷ்வரன் வனப்பகுதியில் உள்ள மலை கிராமத்திற்கு பத்து கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மலை கிராமத்தை பார்வையிட்டார். இங்குள்ள பொதுமக்கள் மூன்று தலைமுறையாக விவசாயம் செய்து வாழ்ந்து வருவதாகவும், அடிப்படைவசதி இல்லாததால் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மலை பகுதியில் இருந்து வெளியேறிவிட்டனர்.
தற்போது வாழ்ந்து வரும் மக்கள் விவசாயத்திற்கு டிராக்டர் கொண்டுவர வனப்பகுதியிடம் அனுமதி பெற்று தரவேண்டும், சாலை மின்சாரம் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என அப்போது அவர்கள் கோரிக்கை வைத்தனர்.