தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 24, 2020, 10:55 AM IST

ETV Bharat / state

ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடுவதில் இரு பிரிவினரிடையே மோதல்

கடலூர்: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடுவதில் அதிமுகவின் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது.

admk
admk

கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சி.என்.பாளையம் கிராம ஊராட்சியில், அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மல்லிகா வைத்திலிங்கம், முன்னாள் ஊராட்சி கவுன்சிலர் தாமரைச்செல்வி தனசேகரன் ஆகியோர் இரு குழுக்களாக செயல்பட்டு வந்தனர்.

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மல்லிகா வைத்தியலிங்கம் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்காக அமைக்கப்பட்ட பந்தலில், முன்னாள் ஊராட்சி கவுன்சிலர் தாமரைச்செல்வி தனசேகரன் ஆதரவாளர்கள் அலங்கார வளைவு அமைத்ததால், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது.

ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடுவதில் இரு பிரிவினரிடையே மோதல்

இன்று பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரு பிரிவு அதிமுகவினர் இடையே ஏற்பட்ட இந்த மோதல் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

இதையும் படிங்க:'தங்க தமிழ்ச்செல்வன், ராஜ கண்ணப்பனை வைத்துக்கொண்டு திமுகவை முட்டுக்கொடுக்கும் ஸ்டாலின்!' - எம்.பி. ரவீந்திரநாத் குமார்

ABOUT THE AUTHOR

...view details