தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா வைரஸ்: தருமபுரியில் 3 வயது குழந்தை உள்ளிட்ட 20 பேருக்கு கரோனா உறுதி! - கரோனா செய்திகள்

தருமபுரி: நேற்று ஒரே நாளில் 3 வயது குழந்தை உள்பட 20 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 258ஆக அதிகரித்துள்ளது.

Corona virus: Corona confirmed for 20 people including 3-year-old child in Dharmapuri!
Corona virus: Corona confirmed for 20 people including 3-year-old child in Dharmapuri!

By

Published : Jul 14, 2020, 12:39 AM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், இன்று (ஜூலை 13) ஒரே நாளில் 4 ஆயிரத்து 328 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 798ஆக அதிகரித்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஏற்கனவே 238 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், இன்று 3 வயது குழந்தை உள்பட மேலும் 20 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் 258ஆக அதிகரித்துள்ளது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 97 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details