தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி! - பாலியில் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்

தர்மபுரி: பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.

பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்

By

Published : Nov 14, 2019, 11:30 PM IST

தர்மபுரி மாவட்டத்தில் சமூக நலத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில், பாலியல் குற்றங்களில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2012 குறித்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் மலர் விழி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியில் பெண் குழந்தைகள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும், குழந்தைகளுக்கு எதிரான செயல்கள் எதுவும் நடைபெற்றால் அதனை பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள்

பெற்றோர்களும் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே பாதுகாப்பு பற்றி சொல்லித் தரவேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். ஊர்வலத்தில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:

தென்னிந்திய திருச்சபை போதகர்கள் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details