தர்மபுரி :தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார்மயமாக்கப்படுவதைக் கண்டித்தும், போனஸ் வழங்கக் கோரி வலியுறுத்தியும் தர்மபுரி மாவட்ட பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் நேற்று (நவ.11) மாலை ஆர்பாட்டம் நடைபெற்றது.
மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்திற்கு பட்டாளி தொழிற்சங்கத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.