தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரியில் கார் விபத்து - மூவர் பலி, ஓட்டுநர் படுகாயம்! - Dharmapuri news

தருமபுரி: தொப்பூர் கணவாய் பகுதியில், கார் மீது லாரி மோதியதில், காரில் பயணித்த மூன்று பெண்கள் உயிரிழந்தனர்.

Dharmapuri car accident

By

Published : Nov 25, 2019, 10:36 PM IST

தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள, தொப்பூர் கணவாய் பகுதியின் அருகே, வேலூர் மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து, திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது, பின்னால் வந்த லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணித்த, திருப்பத்தூர், கங்கனாம்பளையம் பகுதியைச் சேர்ந்த சத்தியவாணி, அன்புமணி, கவிதா ஆகிய மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாய் உயிரிழந்தனர். கார் ஓட்டுனர் ரமேஷ் படுகாயமடைந்தார்.

Car accident at Dharmapuri

கார் ஓட்டுனர் ரமேஷ் தற்போது, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து குறித்து, தொப்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:நெடுஞ்சாலையில் கிடந்த கைத்துப்பாக்கி - பீதியடைந்த பொதுமக்கள்!

ABOUT THE AUTHOR

...view details