தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் கோட்டப்பட்டி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக புரெவி புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் விளைநிலங்களில் உள்ள பயிர்கள் சேதமடைந்துள்ளன.
கோட்டப்பட்டி பகுதியில் விவசாயி பழனி என்பவருக்கு சொந்தமான 1500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் காற்று, மழைகாரணமாக சேதமடைந்து. கோட்டப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பலரது வயல்களில் நடவு செய்திருக்கும் நெற்பயிர்களும் இந்த மழையால் சாய்ந்து சேதமடைந்துள்ளன.
இது குறித்து வாழைவிவசாயி பழனி கூறுகையில், "நிவர் புயலின் தாக்கம் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டம் வரை இருக்கும் என அரசு தரப்பில் தெரிவித்து வந்தனர். இவ்விரு மாவட்டங்களின் எல்லையையொட்டிய தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.