தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குள்பட்ட தொப்பூா் பகுதியில் தொப்பையாறு அணையை மாவட்ட ஆட்சியர் கார்த்திகா நேரில் பார்வையிட்டார்.
பின்னர் அவர் அணையின் மொத்த கொள்ளளவு, அணைக்கு நீர்வரத்திற்கான நீர் ஆதாரம், பாசன வசதி பெறும் கிராமங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களைப் பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.