தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் கரோனா வைரஸ் தடுப்பு, விழிப்புணர்வு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நூற்றுக்கணக்கானோருக்கு குடிநீர், உணவுப் பொட்டலங்களை அழகு அரூர் அறக்கட்டளை வழங்கிவருகிறது. மேலும், ஆதரவற்றோருக்கும் இந்த அறக்கட்டளை உதவி வருகிறது.
அழகு அரூர் அறக்கட்டளைக்குச் சொந்தமான வாட்ஸ்-ஆப் குழு மூலம் இலவச உணவு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு, நிதி உதவி பெற்று கடந்த இரண்டு நாள்களாக இந்த பணிகளை அறக்கட்டளை நிர்வாகம் செய்துவருகிறது. இந்த வாட்ஸ்-ஆப் குழுவில் சார் ஆட்சியர், அரசுத் துறை அலுவலர்கள், தொழில் அதிபர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் இடம்பெற்றுள்ளனர்.