தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பொம்ம அள்ளி, உச்சம்பட்டியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை தமிழ்நாடு உயர் கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் திறந்துவைத்தார். தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு மருத்துவப் பெட்டகத்தை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பழகன், "தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து, திறந்துவைத்துள்ளார். இதில் ஒரு மருத்துவர், செவிலி, மருத்துவப் பணியாளர் என மூன்று பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்திற்கு 43 மினி கிளினிக்குகள் வழங்கப்பட்டுள்ளன.