தருமபுரி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை குறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த ஆண்டு தமிழ்நாட்டைவிட கர்நாடகா, ஆந்திராவில் டெங்கு பாதிப்பு அதிகமாகவுள்ளது. இதனால் அம்மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழ்நாடு மாவட்டங்களான ஈரோடு, தருமபுரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் டெங்குகாய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது என்றார்.