கடலூர் மாவட்டத்தைச்சேர்ந்த 14 வயது பெண் தனது உறவுக்காரப்பெண் ஒருவருடன் கடைக்குச் சென்று வீடு திரும்பியுள்ளார். அப்போது, வெங்கடேசன், தினேஷ், மதுரகவி என்கிற மூன்று பேர் அந்த இரண்டு பெண்களையும் வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இது குறித்து அந்த 14 வயது பெண் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் அவளின் பெற்றோர் சென்று அந்த மூவரையும் தட்டிக்கேட்டுள்ளனர். இதில், ஆத்திரமடைந்த அவர்கள் சிறுமியின் பெற்றோரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.