தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயிலில் மது அருந்தி இறைச்சி சாப்பிட்ட இருவர் பணியிடை நீக்கம்! - kolanjiyappar temple issue

கடலூர்: மணவாளநல்லூரில் உள்ள கொளஞ்சியப்பர் கோயிலில் மது அருந்து, இறைச்சி சாப்பிட்ட கோயில் பொறுப்பாளர், காவலாளி இருவரை இந்து அறநிலையத் துறை அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

மணவாளநல்லூர்  கடலூர் செய்திகள்  eat meat in temple  kolanjiyappar temple issue  cuddalore news
கோயிலில் மதுக்குடித்து,இறைச்சி சாப்பிட்ட இருவர் பணியிடை நீக்கம்

By

Published : Aug 16, 2020, 9:04 PM IST

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மணவாளநல்லூரில் பிரசித்திப் பெற்ற கொளஞ்சியப்பர் கோயில் உள்ளது. கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு மாதத்திற்கு மேலாக இக்கோயில் மூடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வராமல் வெறிச்சோடி இருந்த நிலையில், அக்கோயில் பொறுப்பு மேலாளர் சிவராஜன், காவலாளி சிவக்குமார் கோயில் வளாகத்தில் மது அருந்திவிட்டு இறைச்சி சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

கோயிலில் மதுக்குடித்து,இறைச்சி சாப்பிட்ட இருவர் பணியிடை நீக்கம்

இதைத் தொடர்ந்து, விழுப்புரம் இந்துசமய அறநிலைத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன் கோயில் வளாகத்தில் மது அருந்திவிட்டு இறைச்சி சாப்பிட்ட கோயில் பொறுப்பு மேலாளர் சிவராஜன், காவலர் சிவக்குமார் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும், அவர்கள் மான்கறி சாப்பிட்டார்களா என இருவரிடமும் விசாரணை நடத்த வனத்துறை அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில், இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.

இதையும் படிங்க:கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய இருவர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details