தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சி முறைகேடு:  கடலூரைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது - CBCID police

கடலூர்: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக மேலும் ஒருவரை நேற்று சிபிசிஐடியினர் கைது செய்தனர்.

Another person from Cuddalore arrested
Another person from Cuddalore arrested

By

Published : Jan 29, 2020, 12:47 PM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப்-4 பணியிடங்களுக்குக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் வெளியாகின. அதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றது அலுவலர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி அலுவலர்கள் நடத்திய விசாரணையில், தேர்வில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின் 99 தேர்வர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டது. மேலும், இவர்களில் மூன்று பேர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. முறைகேட்டிற்கு உதவியாக இருந்த ராஜசேகர் என்பவரை சிபிசிஐடியினர் அண்மையில் கைதுசெய்திருந்த நிலையில், இது தொடர்பாக அவரது உறவினரான சீனிவாசனையும் செஞ்சி காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த பண்ருட்டியைச் சேர்ந்த சிவராஜை (31) கடலூர் சிபிசிஐடி ஆய்வாளர் தீபா தலைமையிலான காவல் துறையினர் பண்ருட்டியில் நேற்று கைது செய்தனர். மாற்றுத் திறனாளியான சிவராஜ், குரூப்-4 தேர்வை முறைகேடாக எழுதியதுடன், இடைத்தரகராகச் செயல்பட்டதாகவும் காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடலூரில் கைது செய்யப்பட்ட சிவராஜ்

இதே வழக்கில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த விக்னேஷ் (25)என்பவரும் கைதாகியுள்ளார். இந்த முறைகேட்டில் மேலும் சிலருக்குத் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் சிபிசிஐடியினர் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: குரூப் 2ஏ தேர்வு முறைகேடு: தொடங்கியது விசாரணை

ABOUT THE AUTHOR

...view details