தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘தமாகாவின் குரல் சட்டப்பேரவையில் ஒலிக்கும்’ - ஜி.கே. வாசன் - தமிழ்நாடு தேர்தல்

கடலூர்: வருகிற சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று தமாகாவின் குரல் சட்டப்பேரவையில் ஒலிக்கும் என ஜி.கே. வாசன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

tmc-voice-will-be-heard-in-the-assembly-gk-vasan
tmc-voice-will-be-heard-in-the-assembly-gk-vasan

By

Published : Feb 4, 2021, 6:48 AM IST

கடலூரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நடைபெற்றுவரும் சட்டப்பேரவை, மக்களவை கூட்டத் தொடரிலிருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்புச் செய்வது மக்கள் விரோதமானது.

தேர்தல் நெருங்கிவருவதால் மு.க. ஸ்டாலின், எம்ஜிஆர் குறித்துப் பேசிவருகிறார். இது அவர்களின் பலவீனத்தைக் காட்டுகிறது.

கந்தசஷ்டி கவசம், முகமது நபிகள் குறித்து அவதூறு பேசி பிரிவினையை ஏற்படுத்துவோருக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். என்.எல்.சி.யில் பல்வேறு பணிகளுக்கான நேர்முகத் தேர்விற்கு 1,528 பேர் அழைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இரண்டு பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது, தமிழ்நாட்டினர் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாகக் கருத வேண்டியுள்ளது.

இது குறித்து துறைசார்ந்த அமைச்சர்களிடம் வலியுறுத்தி நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். என்.எல்.சி. குறித்து அப்பகுதி மக்களின் எண்ணங்களை முழுமையாகப் பிரதிபலிக்கும் வகையில் வரும் நாள்களில் செயல்பட வேண்டும்.

‘தமாகாவின் குரல் சட்டப்பேரவையில் ஒலிக்கும்’

கூட்டணி குறித்து சரியான நேரத்தில் அதிமுக அறிவிப்பு வெளியிடும் என்று நம்புகிறோம். எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்ற குழப்பம் அதிமுக கூட்டணியில் இல்லை. தமாகா தனது சின்னத்திலேயே போட்டியிடும்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று தமாகாவின் குரல் சட்டப்பேரவையில் ஒலிக்கும். காங்கிரஸ் கட்சியிலிருந்து நமச்சிவாயம் உள்ளிட்ட தலைவர்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்து விலகிவருவது அக்கட்சியின் பலவீனத்தை எடுத்துக் காட்டுகிறது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: வி.கே. சசிகலாவை சந்திக்க முயற்சித்த அதிமுக செயலாளர் கட்சியிலிருந்து நீக்கம்!

ABOUT THE AUTHOR

...view details