கடலூர்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின மாநிலக்குழுக்கூட்டம் கடலூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் என். பழனிசாமி தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலப்பொது செயலாளர் டி. ரவீந்தரன், " சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஒரு டன் கரும்புக்கு ரூ. 4 ஆயிரம் ஆதார விலையாக வழங்கப்படும் என திமுக வாக்குறுதி வழங்கியது. அதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
2020 -21 ஆண்டு அரவைக்கு அனுப்பிய கரும்புக்கு சர்க்கரை ஆலைகள். டன்னுக்கு 2 ஆயிரத்து 707 ரூபாய் 50 பைசா மட்டுமே தருகிறார்கள். இதனுடன் மாநில அரசு ஊக்கத் தொகையாக ரூ.142.50 விவசாயிகளுக்கு நேரடியாக தரவேண்டும்.
கடலூரில் செயல்பட்டு வந்த அம்பிகா, ஆரூரான் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு ரூ.200 கோடி வரை பாக்கி வைத்து விட்டு, ஆலையை மூடிவிட்டனர்.