தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 1, 2019, 8:18 PM IST

ETV Bharat / state

'திமுக கூட்டணிதான் வெற்றிபெறும்' - தொல். திருமாவளவன்

கடலூர்: அதிமுகவும் பாஜகவும் தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்போடு செயல் திட்டம் தீட்டினாலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்று தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

thirumavalavan

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளைக் காட்டி 500க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்றிடம் வழங்காததை கண்டித்தும் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் சிதம்பரம் காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய திருமாவளவன், 'விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீவிரமாக களப்பணியாற்றும். இந்த இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் என்பது வரும் பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டமாகும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில், 'ஆளும் கட்சியினர் அதிகார துஷ்பிரயோகம் செய்து வெற்றி பெற முயற்சிக்கின்றனர். அதிமுகவும், பாஜகவும் தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்போடு இந்த செயல்களை அரங்கேற்ற திட்டமிட்டாலும், திமுக கூட்டணியே வெற்றி பெறும்' எனக் கூறினார்.

மேலும், 'சிதம்பரம் நகரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த மக்களை நீதிமன்ற உத்தரவைக் காட்டி 500க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்துள்ளனர். அவர்களுக்கு மாற்று இடம் தராதது அதிர்ச்சியளிக்கிறது. என்எல்சியால் பாதிக்கப்படும் கடலூர் மாவட்ட மக்களுக்கே, அந்த நிதியை செலவிட வேண்டும். கீழடியில் கண்டெடுக்கப்பட்ட அகழாய்வு மற்றும் ஆராய்ச்சிகளின் மூலம் தமிழன் பெருமை உலகம் வரை சென்றுள்ளது.

கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்படும் பொருள்களை தமிழ்நாட்டிலேயே அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க :‘திமுகவை மகத்தான வெற்றி பெறச்செய்வோம்’ - வேல்முருகன் உறுதி

ABOUT THE AUTHOR

...view details