கடலூர் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்தியாவினுடைய ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் மோடி தலைமையிலான மத்திய அரசும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசும் தோல்வியைத் தழுவ வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளோம்.
பாரதிய ஜனதா கட்சியிடமிருந்து இந்தியாவை மட்டுமல்ல; எதிர்க்கட்சிகளையும் காப்பாற்ற வேண்டும். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும். கூட்டணி குறித்து, திமுகவுடன் தற்போது இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை முடியும் நிலையில் உள்ளது. எத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பதை திமுகதான் முடிவுசெய்யும்.