தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து - நிலக்கரி ,கன்வேயர் பெல்ட் எனப்படும் இழுவை இயந்திரம் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது

நெய்வேலி: என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் விரைவாக வந்து தீயை அணைத்தனர்.

நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து

By

Published : May 4, 2020, 8:09 PM IST

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி அனல் மின் நிலையத்தின் முதலாவது சுரங்கத்திலிருந்து அனல் மின் நிலைய சேமிப்பு கிடங்கிற்கு நிலக்கரி, கன்வேயர் பெல்ட் எனப்படும் இழுவை இயந்திரம் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்நிலையில் நிலக்கரியை எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட், திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த நெய்வேலி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. பராமரிப்பு குறைபாடு காரணமாகவே, இந்த தீ விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கொண்டு செல்லும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. இதனால் நெய்வேலி அனல் மின் நிலையம் பணியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: செங்குன்றம் அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் குடோனில் தீ விபத்து!

ABOUT THE AUTHOR

...view details