தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சூடான் தீ விபத்து; கணவரின் உடலை மீட்டு தரக்கோரி மனு...

கடலூர்: சூடான் நாட்டின் செராமிக் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர கோரி மாவட்ட ஆட்சியரிடம் அவரின் மனைவி மனு அளித்துள்ளார்.

By

Published : Dec 4, 2019, 11:11 PM IST

sudan fire accident
sudan fire accident

சூடான் நாட்டின் தலைநகரான கார்டூமில் உள்ள செராமிக் ஆலையில் நேற்று சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த ஆலையில் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வந்தனர். இந்த விபத்தில் சிக்கி 18 இந்தியர்கள் உட்பட 23 பேர் உயிரிழந்தனர். 130 பேர் படுகாயம் அடைந்ததாக சூடான் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த விபத்தில் 18 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆலையில் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளிவந்துள்ளது. ஏழு இந்தியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், அதில் நால்வர் மோசமான நிலையில் உள்ளதாகவும் இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

சூடான் தீ விபத்தில் உயிரிழந்தவரின் உடலை மீட்க கோரிக்கை
இந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த கலைசுந்தரி என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் ' என்னுடைய கணவர் ராஜசேகர் முருகன் (37) என்பவர் 27.10.2017 அன்று சூடான் நாட்டில் உள்ள செராமிக் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். இந்த ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் என் கணவர் ராஜசேகர் உயிரிழந்ததாக தகவல் வந்துள்ளது. எனவே எனது கணவரின் உடலை சொந்த ஊரான பண்ருட்டிக்கு கொண்டுவந்து சேர்க்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: சூடான் தீ விபத்து - 18 இந்தியர்கள் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details