மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 38 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியதையடுத்து, கடலூர், சிதம்பரம், விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய ஆறு மக்களவைத் தொகுதிகளின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நேற்று சனிக்கிழமையன்று கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய தொல். திருமாவளவன் எம்.பி, "கலைஞர் போன்ற ஆளுமை, வலிமை மிக்க தலைவராக ஸ்டாலின் உள்ளாரா என பொது தளத்தில் இருந்து பலர் கேள்வியெழுப்பினர். அதற்கு பதில் அளிக்கும் வகையில் நடந்து முடிந்த இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களைில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆகையால் அவர் மறைந்த கலைஞர் இடத்தை மட்டுமல்ல முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வெற்றிடத்தையும் நிரப்பியிருக்கிறார்.