கடலூர்: கடலூர் மாவட்டம் சான்றோர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (28). இவர் நேற்று (மார்ச் 11) அவருடைய நண்பர் ஒருவரின் இறப்புக்கு சென்று வந்துள்ளார்.
பின்னர், நேற்று மாலை நண்பரின் இழப்பை தாங்க முடியாமல் மது குடித்துவிட்டு இரண்டு மதுபாட்டில்களை தனது வேட்டியில் வைத்துகொண்டு சைக்கிளில் வீட்டிற்கு கிளம்பியுள்ளார். குடிபோதையில் வந்த அவர், வேகத்தடையின் மீது ஏறும் பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்பொழுது அவரின் இடுப்பில் வைத்திருந்த இரண்டு மதுபாட்டில்கள் உடைந்து, அவரது வயிற்றிலேயே குத்தி ரத்தம் வெளியேறியுள்ளது.