தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 6, 2019, 2:23 PM IST

ETV Bharat / state

காரில் கள்ளச்சாராயம் கடத்தல் ; பெண் உட்பட இருவர் கைது

கடலூர்: புதுவையிலிருந்து கடலூருக்கு கள்ளச் சாராயம் கடத்த முயன்ற பெண் உட்பட இருவரை கடலூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறை இன்று கைது செய்தனர்.

காரில் கள்ளச்சாராயம் கடத்தல் ; பெண் உட்பட இருவர் கைது

கடலூர் மாவட்டத்தில், மதுவிலக்கு அமல் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா, காவலர்கள் கும்தாமேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்த சைகை காட்டினர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்று விட்டது.

இதையடுத்து, காவலர்கள் அந்த காரை விரட்டி சென்று பிடித்தனர். அப்போது அந்த காரில் பெண் உட்பட இருவர் இருந்தனர். பின்னர் காரை சோதனை செய்த போது 300 லிட்டர் கள்ளச்சாராயம், 10 அட்டைப்பெட்டிகளில் மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

காரில் கள்ளச்சாராயம் கடத்தல் ; பெண் உட்பட இருவர் கைது
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து 300 லிட்டர் கள்ளச் சாராயம், மது பாட்டில்கள், காரை உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். அதன்பின், இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details