தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
கடலூர்: வாகன தணிக்கையின்போது பிடிபட்ட ரூ.4,25,000 வட்டாட்சியரிடம் ஒப்படைப்பு - vehicle inspection
கடலூர்: முதுநகர் அருகே வாகன தணிக்கையின்போது பிடிபட்ட நான்கு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடலூர் வாகன தணிக்கை
இதற்கிடையே வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப்பொருள்கள் கொடுப்பதைத் தடுக்கும்வகையில் மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள், நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என 24 மணிநேரமும் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்துவருகின்றனர்.
பணத்துக்கான உரிய ஆவணம் இல்லாததால் கடலூர் வட்டாட்சியர் பலராமனிடம் தணிக்கையின்போது பிடிபட்ட நான்கு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.