தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படக்கூடாது- ராஜகண்ணப்பன்

கடலூர்: தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படக்கூடாது. காவல்துறையின் வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

By

Published : Apr 6, 2019, 10:49 AM IST

Updated : Apr 6, 2019, 5:46 PM IST

அமைச்சர் ராஜகண்ணப்பன்

கடலூரில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், திமுக வேட்பாளர் டிஆர்விஎஸ் ரமேஷுக்கு ஆதரவு தெரிவித்து செயல்வீரர்கள் கூட்டம் நடத்தினார். இதில் திமுகவின் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "பாஜகவின் கொத்தடிமைகளாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் மாறிவிட்ட காரணமாக, பாஜக கேட்ட இடங்களை எல்லாம் அதிமுக தென் மாவட்டத்தில் ஒதுக்கிக் கொடுத்துள்ளது. அதன் காரணமாக பாரதிய ஜனதா கட்சி சொல்வதைக் கேட்டுக்கொண்டு அம்மாவையும், எம்ஜிஆரையும் மறந்து விட்டு இரட்டை இலை சின்னத்தையும், கோடியும் வைத்துகொண்டு கட்சி நடத்தி வருகின்றனர்.

மக்களவை தேர்தலில் 40 உறுப்பினர்கள் சென்றால்தான் தமிழ்நாட்டுக்கு மரியாதை. தமிழ்நாட்டில் உள்ள பிரச்னைகளை தீர்க்க திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற அணி வெற்றி பெற வேண்டும்.

தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவது என்பது என்னுடைய குற்றச்சாட்டு. துரைமுருகன் வீட்டில் சோதனையிட்ட வருமானவரித்துறையினர் ஏன் ஏ.சி.சண்முகம் வீட்டில் சோதனை நடத்தவில்லை. தற்போது காவல்துறையினர் வாகனத்தில் பணம் செல்வதாக புகார் வந்துள்ளது. தேர்தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாக செயல்படாமல் நேர்மையாக நடக்க வேண்டும்" என்றார்.

Last Updated : Apr 6, 2019, 5:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details