நெய்வேலியில் உள்ள கட்சி நிர்வாகியின் கடை திறப்பு விழாவிற்கு பொன். ராதாகிருஷ்ணன் வருகைதந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று அதிகமாக இருக்கும் காலத்தில் சிலர் அதன் வீரியத்தை அறியாமல் வெளியே சுற்றிவந்தனர். அப்படி வெளியே வந்தவர்களிடம் காவல் துறையினர் காலை தொட்டு வணங்கினர்.
பிரதமர் மோடி கூட காவல் துறையினரை உயர்வாகப் பேசினார். ஆனால் தூத்துக்குடியில் காவல் துறையினர் செய்தது தமிழ்நாடு காவல் துறையின் கரும்புள்ளியாக உள்ளது.