கடலூர்: புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குநர் செந்தில் செல்வம் என்பவரது திரைப்பட அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக யூடியூபர் டிடிஎஃப் வாசன் வருகை தந்தார். இதனால் அவரை காண்பதற்காக அவரது ரசிகர்கள் 200-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் வந்தனர்.
இதனால், புதுப்பாளையம் பகுதியில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கு வந்த காவல் துறையினர், டிடிஎஃப் வாசனின் ஆதரவாளர்களை விரட்டி அடித்தனர். மேலும், 200-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மீது வழக்குப்பதிவும், அபராதமும் விதிக்கப்பட்டது.