கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகரத்துக்கு உட்பட்ட தட்டாஞ்சாவடி பகுதியிலுள்ள பாதாள சாக்கடையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் பண்ருட்டி காவல் துணை கண்காணிப்பாளர் பாபுபிரசாத் தலைமையிலான காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாதாள சாக்கடையின் பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த சடலத்தை மீட்பதற்காக மருத்துவ உதவியாளர் மற்றும் நகராட்சி துப்புரவு பணியாளருக்கு தகவல் தெரிவித்தனர்.