கடலூர் மஞ்சகுப்பத்தில் அரசு உதவிபெறும் பள்ளி இயங்கி வருகிறது. இதில் 2017-18ஆம் ஆண்டு பள்ளியில் படித்த மாணவர்கள் ஐந்து பேர் தங்களுக்கு அரசு வழங்ககூடிய மடிக்கணினி வழங்க வேண்டும் என்று பள்ளி முதல்வரிடம் சென்று கேட்டுள்ளனர்.
அதற்கு முதல்வர் மடிக்கணினி 2017-18ஆம் ஆண்டு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வரவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அரசு வழங்க உத்தரவிட்டால் வழங்குவதாக கூறி அவர்களை அனுப்பிவிட்டார்.
பின்னர் பள்ளி வளாகத்தில் சுற்றிய ஐந்து மாணவர்கள் சத்தமிட்டும் கூச்சலிட்டும் சென்றுள்ளனர். இதனை பார்த்த உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகன், பள்ளி வளாகத்தில் சத்தமிட வேண்டாம் வெளியே போய் சத்தமிட்டுக்கொள்ளுங்கள் என்று அவர்களிடம் கூறியுள்ளார்.